நீலகிரி : தமிழகத்தில் தொடர்ந்து 24 மணிநேரமும் மழைப் பதிவாகிய பகுதியாகவும், அதிகபட்சமாக 820 மி.மீ. மழை பதிவாகிய இடமாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி வரலாறு படைத்துள்ளது. மேலும், இங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதோடு, மலையை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.
நீலகிரி : தமிழகத்தில் தொடர்ந்து 24 மணிநேரமும் மழைப் பதிவாகிய பகுதியாகவும், அதிகபட்சமாக 820 மி.மீ. மழை பதிவாகிய இடமாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி வரலாறு படைத்துள்ளது. மேலும், இங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதோடு, மலையை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக தமிழகத்தின் வெதர்மேன் கூறுகையில், "தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டத்தை ஒப்பிடும் வகையில் வேறு எந்தப் பகுதியில் நாள் முழுவதும் மழைப் பொழிவு கிடைக்கவில்லை. அகும்பே, ஹுலிக்கல், அமேகான் மற்றும் தலா காவேரியில் கூட இவ்வளவு மழை கிடையாது," என்றார்.

நீலகிரி மற்றும் கோவையில் மழை பதிவாகியுள்ள பகுதிகளின் விபரம் :
நீலகிரி :
அவலாஞ்சி : 820 மி.மீ.
முகூர்த்தி : 334 மி.மீ.
அப்பர் பவானி : 300 மி.மீ.
கூடலூர் : 241 மி.மீ.
தேவாலா : 210 மி.மீ.
நடுவட்டம் : 181 மி.மீ.
எமரால்டு : 181 மி.மீ.
கிளென் மார்கன் : 175 மி.மீ.
உதகை : 37 மி.மீ.
கோடநாடு : 17 மி.மீ.
கேத்தி : 14 மி.மீ.
குன்னூர் : 12 மி.மீ.
பரலியாறு : 9 மி.மீ.
கோத்தகிரி : 5 மி.மீ.
கோவை :
சின்னக்கல்லாறு : 226 மி.மீ.
சோலையாறு அணை : 165 மி.மீ.
கீழ் நீராறு : 162 மி.மீ.
சின்கோனா : 155 மி.மீ.
வால்பாறை பி.ஏ.பி. : 138 மி.மீ.
வால்பாறை தாலுகா அலுவலகம் : 137 மி.மீ.