கோவை : கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரையிலான சாலை விழிப்புணர்வு பயணம் நாளை தொடங்குகிறது.
கோவை : கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரையிலான சாலை விழிப்புணர்வு பயணம் நாளை தொடங்குகிறது.
பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களுள் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய். கருப்பையின் வாய்ப் பகுதியில் ஹ்யூமன் பாப்பிலோமா எனும் வைரஸ் தாக்குதலினால் இந்நோய் உண்டாகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயினால் உயிரிழக்கிறார்.
இந்த நிலையில், இந்த கருப்பைவாய் புற்றுநோய் குறித்தும், எச்.பி.வி. தடுப்பூசி பற்றியும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர். ஆர். டிரஸ்ட் எனும் தன்னார்வல அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 8 தன்னார்வலர்கள் கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை 2 கார்களில் சாலை வழியாகவே நீண்ட விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் சரத் மாதவ், தொழில்முனைவர் பிரதீப் யுவராஜ், சமூக சேவகர் ஜோமட் மணி, சாகசப்பயணி அஞ்சனா கவுல், சஞ்சய் சுப்பையன், இல்லத்தரசி ஷீலா வர்கீஸ், நுண் கலைஞர் மாதுரி சார்பு மற்றும் மீனாட்சி அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாளை (ஆக.,7) முதல் கோவையில் இருந்து தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். இந்தக் குழு இந்தியா, நேபாள், சீனா, திபெத், ரஷ்யா ஆகிய நாடுகளின் பெருநகரங்களிலும், சிறிய கிராமங்களிலும் விழிப்புணர்வு உரை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. நாளை துவங்கும் இந்தப் பயணம் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைய இருக்கிறது.
பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களுள் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய். கருப்பையின் வாய்ப் பகுதியில் ஹ்யூமன் பாப்பிலோமா எனும் வைரஸ் தாக்குதலினால் இந்நோய் உண்டாகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயினால் உயிரிழக்கிறார்.
இந்த நிலையில், இந்த கருப்பைவாய் புற்றுநோய் குறித்தும், எச்.பி.வி. தடுப்பூசி பற்றியும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர். ஆர். டிரஸ்ட் எனும் தன்னார்வல அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 8 தன்னார்வலர்கள் கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை 2 கார்களில் சாலை வழியாகவே நீண்ட விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் சரத் மாதவ், தொழில்முனைவர் பிரதீப் யுவராஜ், சமூக சேவகர் ஜோமட் மணி, சாகசப்பயணி அஞ்சனா கவுல், சஞ்சய் சுப்பையன், இல்லத்தரசி ஷீலா வர்கீஸ், நுண் கலைஞர் மாதுரி சார்பு மற்றும் மீனாட்சி அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாளை (ஆக.,7) முதல் கோவையில் இருந்து தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். இந்தக் குழு இந்தியா, நேபாள், சீனா, திபெத், ரஷ்யா ஆகிய நாடுகளின் பெருநகரங்களிலும், சிறிய கிராமங்களிலும் விழிப்புணர்வு உரை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. நாளை துவங்கும் இந்தப் பயணம் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைய இருக்கிறது.