கோவை : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அறிவிக்கப்படாத நெருக்கடி மூலம் அம்மாநிலத்தை மத்திய அரசு பிரித்திருப்பதாகவும், ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அறிவிக்கப்படாத நெருக்கடி மூலம் அம்மாநிலத்தை மத்திய அரசு பிரித்திருப்பதாகவும், ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.