கோவை : பல ஆண்டுகளாக சீரான மின்சார சேவையின்றி அவதிப்பட்டு வந்த பனப்பள்ளி மலை கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டது.
கோவை : பல ஆண்டுகளாக சீரான மின்சார சேவையின்றி அவதிப்பட்டு வந்த பனப்பள்ளி மலை கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டது.
பனப்பள்ளி மலை கிராமத்துக்கு என்று தனியாக மின்மாற்றி இல்லாத காரணத்தால் கொண்டனூர் புதூர் மலை கிராமத்தில் இருந்து பல ஆண்டுகளாக மின்சாரம் கொடுக்கப்பட்டது. கொண்டனூர் புதூரில் இருந்து பனப்பள்ளி மலை கிராமம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரணத்தால் சிங்கிள் பேஸ் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதுவும் சீரான மின் இணைப்பு எப்போதுமே இருக்காது. இதனால், அக்கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பழங்குடியினர் மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய மின்மாற்றி அமைக்க வொர்க் ஆர்டர் கொடுத்து மின் சாதனங்கள் மற்றும் மின் கம்பங்களை கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டன.
கடந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி பதிவு செய்யப்பட்ட காரணத்தால், கடந்த மாதம் 20-ம் தேதி மின்மாற்றி அமைப்பதற்கான பணிகளை மின்வாரியத் துறையினர் தொடங்கினர். மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை 5.45 மணிக்கு புதிய மின்மாற்றி பனப்பள்ளி மலை கிராமத்துக்கு வழங்கப்பட்டது. புதிய மின்மாற்றி துவக்க விழாவில் மின்வாரியம் அதிகாரிகள் பாலசுப்ரமணியன் (EE), தெய்வ சிகாமணி (AD), தேவராஜன், பழனிசாமி (EX Ward Member) மற்றும் பனப்பள்ளி மலை கிராமம் மக்கள் கலந்து கொண்டனர்.