போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும், மாநில அரசு மீட்டர் கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் பேசியதாவது :- 2 முறை போக்குவரத்து சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயன்று போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்ற காரணத்தினால் சட்ட திருத்த மசோதவை அமல்படுத்தி உள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடமானம் வைப்பது போன்றது. மேலும், தினமும் 200, 300 ரூபாய் வருமானம் ஈட்டவே சிரமமாக உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கிறது. 

மாநில அரசும் ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறது. முறையான கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு ஒரு முறை கட்டண முறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறாவிட்டால், ஆட்டோ தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம், எனக் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...