கோவை : நண்பர்கள் தினத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முதியோர்கள் தங்கும் விடுதியில் உள்ள முதிவர்களுடன் ரோட்டரி சங்க ஐகான் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை : நண்பர்கள் தினத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முதியோர்கள் தங்கும் விடுதியில் உள்ள முதிவர்களுடன் ரோட்டரி சங்க ஐகான் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரோட்டரி சங்க கிளை அமைப்பான ரோட்டரி ஐகான் கோவை அமைப்பினர் நண்பர்கள் தினதன்று மாநகராட்சி கட்டுபாட்டில் ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர்கள் தங்கும் இரவு விடுதியில் கொண்டாடினர். அப்போது, அங்குள்ள முதியோர்களுடன் பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர். இவர்களுடன் ஆடல், பாடல், நடன நிகழ்ச்சி என அங்கிருந்த முதியவர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இது குறித்து ரோட்டரி கிளப் அமைப்பினர் கூறுகையில், “பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ரோட்டரி ஐகான் உறுப்பினர்கள் இந்த வருடம் நண்பர்கள் தினத்தை முதியோர்களுடன் கொண்டாடுவது என முடிவு செய்யபட்டது. அதன்படி, 30-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி முதியோர் இரவு தங்கும் விடுதியில் நண்பர்கள் தினத்தன்று கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தோஷங்கள், துக்கங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும், அவர்கள் கூறிய அறிவுரைகள், ஆலோசனைகள் தங்களுக்கு வாழ்வின் படிப்பினையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களிடம் இருந்து விடைபெற்ற போது மீண்டும் வருவீர்களா என அவர்கள் கேட்டபோது, கனத்த இதயத்துடன் நிச்சயம் வருகிறோம் என கூறி பிரியா விடை பெற்று வந்தோம், எனக் கூறினர்.
ரோட்டரி சங்க கிளை அமைப்பான ரோட்டரி ஐகான் கோவை அமைப்பினர் நண்பர்கள் தினதன்று மாநகராட்சி கட்டுபாட்டில் ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர்கள் தங்கும் இரவு விடுதியில் கொண்டாடினர். அப்போது, அங்குள்ள முதியோர்களுடன் பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர். இவர்களுடன் ஆடல், பாடல், நடன நிகழ்ச்சி என அங்கிருந்த முதியவர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இது குறித்து ரோட்டரி கிளப் அமைப்பினர் கூறுகையில், “பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ரோட்டரி ஐகான் உறுப்பினர்கள் இந்த வருடம் நண்பர்கள் தினத்தை முதியோர்களுடன் கொண்டாடுவது என முடிவு செய்யபட்டது. அதன்படி, 30-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி முதியோர் இரவு தங்கும் விடுதியில் நண்பர்கள் தினத்தன்று கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தோஷங்கள், துக்கங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும், அவர்கள் கூறிய அறிவுரைகள், ஆலோசனைகள் தங்களுக்கு வாழ்வின் படிப்பினையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களிடம் இருந்து விடைபெற்ற போது மீண்டும் வருவீர்களா என அவர்கள் கேட்டபோது, கனத்த இதயத்துடன் நிச்சயம் வருகிறோம் என கூறி பிரியா விடை பெற்று வந்தோம், எனக் கூறினர்.