கணேஷபுரம் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : அன்னூரை அடுத்த கணேஷபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : அன்னூரை அடுத்த கணேஷபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் அன்னூர் அருகே கணேஷபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் விவசாய நிலத்தில் புதிதாக மதுக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மதுபாட்டில்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.



அவர்கள் கூறியதாவது :- விவசாய விளைநிலங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அரசு மதுமானகடை அமைக்க திட்டமிட்டு, விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டி வருகிறது. இதனால், அப்பகுதியிலுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலுடன், சாலைகள் நிறைந்துள்ள பகுதி என்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. விவசாய விளைநிலத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், எனக் கூறினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...