திருப்பூரில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூர் அருகே கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையா..?, தற்கொலையா..? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையா..?, தற்கொலையா..? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் கோம்பைத்தோட்டம் பழக்குடோன் பகுதியைச் சேர்ந்தவர் ரப்தீன் (52). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கட்டிங்க் மாஸ்டராக பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கிணற்றில் ரப்தீன் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தும், தீயணைப்புத் துறையினர் வர காலதாமதம் ஆனதால், அங்குள்ள இளைஞர்களின் உதவியோடு, சடலத்தை போலீசார் மீட்டனர்.

பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ரப்தீன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...