கோவை : 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத் துறைக்கான இணையமைச்சர் பபுல் சுப்ரியோ, காட்டுத்தீயினால் எரிந்த மரங்களைத் தவிர்த்து, வளர்ச்சி பணிகளுக்காக சுமார் ஒரு கோடி மரங்களை வெட்ட அனுமதியளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். கடந்த 2014-2019-ம் ஆண்டுகளுக்கு இடையே சுமார் 1.09 கோடி மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. அதாவது, 2016-17-ம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும், 2017-18-ல் 25.5 லட்சம் மரங்களும், 2018-19-ல் 26.91 லட்சம் மரங்களும் வளர்ச்சி பணிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரின் இந்த அறிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத் துறைக்கான இணையமைச்சர் பபுல் சுப்ரியோ, காட்டுத்தீயினால் எரிந்த மரங்களைத் தவிர்த்து, வளர்ச்சி பணிகளுக்காக சுமார் ஒரு கோடி மரங்களை வெட்ட அனுமதியளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். கடந்த 2014-2019-ம் ஆண்டுகளுக்கு இடையே சுமார் 1.09 கோடி மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. அதாவது, 2016-17-ம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும், 2017-18-ல் 25.5 லட்சம் மரங்களும், 2018-19-ல் 26.91 லட்சம் மரங்களும் வளர்ச்சி பணிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரின் இந்த அறிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.