கோவையில் கலைகட்டிய தாண்டிய நடனம்

ஆர்.எஸ் புரம் பகுதில் உள்ள கோயமுத்தூர் குஜராத் சமாஜ் கலையரங்கில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. 2016ம் ஆண்டு குஜராத் சமாஜ் சிறப்பு ஆண்டாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை குஜராத் சமாஜ் 75ம் ஆண்டு விழா கொண்டப்பட்டது. ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளில் போதும், கோவையில் உள்ள குஜராத்  இனமக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது இதில் சிறப்பாகும். தற்போது 11 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வுகளாக தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சி, பற்றி கோயமுத்தூர் குஜராத் சமாஜ் நிர்வாகி கூறுகையில்: இந்நிகழ்விற்காக, கடந்த 2 மாதங்களாக குஜராத் சமாஜ் திட்டமிட்டுள்ளது. பொதுவாக குஜராத்திய முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படும் தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் நவராத்திரி பண்டிகை முழுமை பெறாது. குஜராத்திலிருந்து இடம்பெயர்ந்த குஜராத்தியின மக்கள் கோயமுத்தூரை தங்கள் தாய் வீடாக கருதிகின்றனர். இதை 100க்கும் மேற்பட்டோர் கோயமுத்தூர் குஜராத் சமாஜ் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையின் போது அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய உடை அணிந்து உணவுகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டு வருகிறது.



இந்நிகழ்ச்சியின், முக்கிய நிகழ்வுகளான நடன நிகழ்ச்சிகள் உணவுக்கு பின் நடைபெறும். இதில் வயது பாலின வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குஜராத்திய பாரம்பரிய உடைகள் அணிந்தது கொண்டாடுவர். ஆண்கள் மோடி உடை பெரும்பாலும் அணிந்து  கொண்டாடினார். பலவகை வண்ண உடைகளில் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...