ஆர்.எஸ் புரம் பகுதில் உள்ள கோயமுத்தூர் குஜராத் சமாஜ் கலையரங்கில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. 2016ம் ஆண்டு குஜராத் சமாஜ் சிறப்பு ஆண்டாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை குஜராத் சமாஜ் 75ம் ஆண்டு விழா கொண்டப்பட்டது. ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளில் போதும், கோவையில் உள்ள குஜராத் இனமக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது இதில் சிறப்பாகும். தற்போது 11 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வுகளாக தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, பற்றி கோயமுத்தூர் குஜராத் சமாஜ் நிர்வாகி கூறுகையில்: இந்நிகழ்விற்காக, கடந்த 2 மாதங்களாக குஜராத் சமாஜ் திட்டமிட்டுள்ளது. பொதுவாக குஜராத்திய முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படும் தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் நவராத்திரி பண்டிகை முழுமை பெறாது. குஜராத்திலிருந்து இடம்பெயர்ந்த குஜராத்தியின மக்கள் கோயமுத்தூரை தங்கள் தாய் வீடாக கருதிகின்றனர். இதை 100க்கும் மேற்பட்டோர் கோயமுத்தூர் குஜராத் சமாஜ் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையின் போது அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய உடை அணிந்து உணவுகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின், முக்கிய நிகழ்வுகளான நடன நிகழ்ச்சிகள் உணவுக்கு பின் நடைபெறும். இதில் வயது பாலின வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குஜராத்திய பாரம்பரிய உடைகள் அணிந்தது கொண்டாடுவர். ஆண்கள் மோடி உடை பெரும்பாலும் அணிந்து கொண்டாடினார். பலவகை வண்ண உடைகளில் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சி, பற்றி கோயமுத்தூர் குஜராத் சமாஜ் நிர்வாகி கூறுகையில்: இந்நிகழ்விற்காக, கடந்த 2 மாதங்களாக குஜராத் சமாஜ் திட்டமிட்டுள்ளது. பொதுவாக குஜராத்திய முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படும் தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் நவராத்திரி பண்டிகை முழுமை பெறாது. குஜராத்திலிருந்து இடம்பெயர்ந்த குஜராத்தியின மக்கள் கோயமுத்தூரை தங்கள் தாய் வீடாக கருதிகின்றனர். இதை 100க்கும் மேற்பட்டோர் கோயமுத்தூர் குஜராத் சமாஜ் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையின் போது அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய உடை அணிந்து உணவுகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின், முக்கிய நிகழ்வுகளான நடன நிகழ்ச்சிகள் உணவுக்கு பின் நடைபெறும். இதில் வயது பாலின வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குஜராத்திய பாரம்பரிய உடைகள் அணிந்தது கொண்டாடுவர். ஆண்கள் மோடி உடை பெரும்பாலும் அணிந்து கொண்டாடினார். பலவகை வண்ண உடைகளில் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

