உதகையில் இன்று பழங்கால வாகனங்களின் 15-ம் ஆண்டு அணிவகுப்பு : சுற்றுலாப் பயணிகள் கண்டுவியப்பு

நீலகிரி : நீலகிரியில் மாவட்டத்தில் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக உதகையில் இன்று பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் 15-ம் ஆண்டு அணிவகுப்பு நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரியில் மாவட்டத்தில் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக உதகையில் இன்று பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் 15-ம் ஆண்டு அணிவகுப்பு நடைபெற்றது. 



அரசு தமிழக மாளிகை முகப்பில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்தார். மேலும், உதகை தமிழக மாளிகையில் துவங்கப்பட்ட இந்த கார்களின் அணிவகுப்பு ஹில் பங்க், ஸ்டீபன் பேராலயம், கமர்ஷியல் சாலை வழியாக ஆனந்த கிரிக்கு அணிவகுத்து வந்ததை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 



ரஷ்யா நாட்டில் 1931-ம் ஆண்டின் ஆஸ்டின், 1936-ம் ஆண்டின் னரல், 1946-ம் ஆண்டின் வோல்ஸ் வேகன், 1966 ஆண்டின் மோரிஸ், ஜாகுவார், பிளைமௌத் என 80-க்கும் மேற்பட்ட கார்கள், 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. 



கொட்டும் மழை மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது உதகையில் நடைபெற்ற இந்த கார்களின் அணிவகுப்பை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சார்ந்த வாகனங்கள் இதில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...