நீலகிரி : உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரசித்தி பெற்ற தூய மரிய தத்தேயு ஆலயத்தில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்க்ஹில் பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வரும் நிலையில், மாதா சொருபம் உடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலையை உடைத்த ஆலயத்தில் மக்கள் கூடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரசித்தி பெற்ற தூய மரிய தத்தேயு ஆலயத்தில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்க்ஹில் பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வரும் நிலையில், மாதா சொருபம் உடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலையை உடைத்த ஆலயத்தில் மக்கள் கூடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.