கோவை : கோவையில் இருசக்கர வாகன கொள்ளையர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாதவாறு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கோவை : கோவையில் இருசக்கர வாகன கொள்ளையர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாதவாறு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளது. இந்த வாகனத் திருட்டு குறித்து காவல் நிலையங்களில் பல புகார்கள் நிலுவையிலேயே உள்ளன. காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதை தடுப்பதற்கு பல்வேறு வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாலும், பிற மாவட்டங்களிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடும் திருடர்கள் மிகவும் இலாவகமாக இருசக்கர வாகனங்களை திருடி செல்கின்றனர்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இரண்டாம் நம்பர் வீதியில் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டி.வி.எஸ். எக்ஸ்.எல். வாகனத்தை சுமார் ஏழு நிமிடங்களில் தன்னுடைய சொந்த வண்டியை எடுத்து செல்வது போல் திருடர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் தொடர்புடையது இந்தக் காட்சிகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.