வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டார்.

கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டார். 

போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் தினசரி 700 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மாநகராட்சியால் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் வாடிக்கையாகவே உள்ளது. இதனிடையே, நேற்று மாலை 5 மணியளவில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அளித்த தகவலின் பேரில் பீளமேடு மற்றும் கோவை தெற்கு பகுதிகளில் இருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தன. 

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...