திருப்பூரில் அரசு பேருந்தை முந்த முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி

திருப்பூர் : அவிநாசி அருகே பேருந்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர் : அவிநாசி அருகே பேருந்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த முத்துச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21) என்ற இளைஞர் அவிநாசியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் உதவி கணக்கராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் சில பேப்பர்களை நகலெடுத்து விட்டு மீண்டும் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இடதுபுறமாக அருண்குமார் சென்ற இருசக்கர வாகனத்தை உரசியதில், நிலை தடுமாறிய அருண்குமார் சரிந்து கீழே விழுந்த அவர் மீது அரசு பேருந்தின் பின்சக்கரம் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...