உரிமம் இல்லாமல் தரமற்ற முறையில் இயற்கை உரங்களை தயார் செய்து வந்த ஆலைக்கு சீல் : கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

கோவை : பொள்ளாச்சி அருகே ஜமின்ஊத்துக்குளி பகுதியில் உரிமம் இல்லாமல் தரமற்ற முறையில் இயற்கை உரங்களை தயார் செய்து வந்த ஆலைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

கோவை : பொள்ளாச்சி அருகே ஜமின்ஊத்துக்குளி பகுதியில் உரிமம் இல்லாமல் தரமற்ற முறையில் இயற்கை உரங்களை தயார் செய்து வந்த ஆலைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி அருகே உள்ள ஜமின்ஊத்துக்குளி பகுதியில் உரிமம் இல்லாமல் 'கிரீன் இண்டியா பயோடெக்' என்ற பெயரில் தரமற்ற முறையில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் (பொள்ளாச்சி) தலைமையில், வட்டாட்சியர் மற்றும் வேளாண்மைத் துறை பறக்கும்படை அலுவலர்கள் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, முறையாக அனுமதி பெறாமல் இயற்கை உரங்கள் என்ற வணிக பெயரில் தரமற்ற உரங்களை தயார் செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ எடையுள்ள 184 மூட்டைகள் 'கிரீன் இண்டியா பயோடெக்' என்ற பெயரிலும், 10 கிலோ எடையுள்ள 10 மூட்டைகள் மைக்ரோ ஃபுட் என்ற நுண்ணூட்ட உரக் கலவை இருப்பு ஆகிய உர ரகங்களை பறிமுதல் செய்யப்பட்டு, தரமற்ற மற்றும் கலப்பட உரம் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 

மேற்படி, உரங்களை பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டு உர ஆய்வு மையங்களுக்கு ஆய்வு அறிக்கை பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த உரங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்று முறையான உரிமம் பெறாமல் தரமற்ற உரங்கள் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...