கோவை : நண்பர்களுடன் சேர்ந்து வங்கிக் கடன் பெற்று தொடங்கிய கூட்டுத் தொழில் தோல்வியடைந்த நிலையில், கோவையில் உள்ள வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : நண்பர்களுடன் சேர்ந்து வங்கிக் கடன் பெற்று தொடங்கிய கூட்டுத் தொழில் தோல்வியடைந்த நிலையில், கோவையில் உள்ள வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த பூபதி (61) மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து பால் பண்ணை வைப்பதற்காக கோவையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். பால் பண்ணை தொழில் இலாபகரமாக இயங்காததால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பூபதி தனது பங்கை செலுத்துவதாகவும், தன்னுடைய அடமான சொத்துக்களை திருப்பி தருமாறு வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த வங்கியின் மேலாளர், கடன் பெற்ற அனைவரின் நிலுவைத் தொகையையும் நீங்கள் கட்டினால் மட்டுமே, சொத்து பத்திரங்களை விடுவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பூபதி வங்கி வாசலிலேயே விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.