நாட்டில் சிறந்த புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்வு : பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவிப்பு

டெல்லி : புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

டெல்லி : புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. 

தென்னிந்தியாவின் முக்கிய புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. இது புலிகள் காப்பகமாக 2013 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 116 சிறுத்தைகள், 70 புலிகள், ஆயிரக்கணக்கான யானைகள், காட்டெருமைகள், அரிய வகை வெளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. புலி, சிறுத்தை, யானைகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2018-ம் ஆண்டு மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதாவது, புலிகள் பாதுகாப்பு, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற 10 தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற விழாவில், சிறந்த புலிகள் காப்பகத்துக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மண்டல காப்பாளர் நாகநாதனிடம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...