நீலகிரி : குன்னூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைப் பெற்றது.
நீலகிரி : குன்னூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைப் பெற்றது.
குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். அதோடு, கண், காது, மூக்கு மற்றும் கை, கால், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை பெற்று தருதல், மேலும் உதவி உபகரணங்கள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட 7 அம்ச முகாம்களும் நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சிறப்பான முறையில் செயலாற்றினார். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், வட்டாரக் கல்வி அலுவலர் கார்த்திக், வட்டார ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். அதோடு, கண், காது, மூக்கு மற்றும் கை, கால், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை பெற்று தருதல், மேலும் உதவி உபகரணங்கள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட 7 அம்ச முகாம்களும் நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சிறப்பான முறையில் செயலாற்றினார். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், வட்டாரக் கல்வி அலுவலர் கார்த்திக், வட்டார ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.