கோவையில் 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' நூல் வெளியீடு

கோவை : சாகச விளையாட்டுத்துறையில் தமிழில் முதல்முறையாக 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' நூல் வெளியிடப்பட்டது.

கோவை : சாகச விளையாட்டுத்துறையில் தமிழில் முதல்முறையாக 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' நூல் வெளியிடப்பட்டது. 

கடந்த 26-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கலையரங்கில் நூல் வெளியீட்டிற்கான விழா நடைபெற்றது. இதில், ஆசிரியர் ஏ. சுரேந்திரன் எழுதிய 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு அரிய சாலைப் பயண குறிப்பு புத்தகமாகும். 70 சதவீத புகைப்படங்களுடன் கூடிய சாகச விளையாட்டுத் துறையில் தமிழில் வெளிவரும் முதல் புத்தகம் என்ற பெருமையைப் பெறுகிறது. சாகச விளையாட்டுக்கள் இயற்கை அழகை ரசிப்பது மற்றும் புதிய இடங்களைப் பற்றிய அறிவிப்புகள் என விரியும் புத்தகமாக விளங்குகிறது. 

இந்த விழாவில் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், டி. லஷ்மி நாராயணசாமி, மரபின் மைந்தன் முத்தையா, மீனாட்சி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...