உதகையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வாழை இலைக்கு மாறிய இறைச்சி விற்பனையாளர்கள் : பொதுமக்கள் பாராட்டு

நீலகிரி : உதகையில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை விற்கும் வியாபாரிகள், 'பிளாஸ்டிக்' பயன்பாட்டிற்கு விடை கொடுத்து விட்டு வாழை இலைக்கு மாறியிருப்பது தன்னார்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி : உதகையில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை விற்கும் வியாபாரிகள், 'பிளாஸ்டிக்' பயன்பாட்டிற்கு விடை கொடுத்து விட்டு வாழை இலைக்கு மாறியிருப்பது தன்னார்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, உதகை நகராட்சி, குன்னூரில் இறைச்சி கடை வியாபாரிகள் 'பிளாஸ்டிக்' பை பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர். கடைகளுக்கு மீன், இறைச்சி வாங்க வருபவர்களுக்கு வாழை இலை மற்றும் பேப்பர் மூலம் 'பார்சல்' செய்து தருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 



இதனிடையே, மலை மாவட்டத்தில் வாழை இலை கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதால், இறைச்சிகளை பார்சல் செய்ய மாற்றுப் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...