குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விற்பனை அமோகம் : விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி : நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் 'டீசர்வ்' ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டதில் பெரும்பாலான தேயிலைகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் 'டீசர்வ்' ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டதில் பெரும்பாலான தேயிலைகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



குன்னூர் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் இந்த ஆண்டிற்கான 30-வது ஏலத்தில் 'இலை ரகம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 902 கிலோவும், டஸ்ட் ரகம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 158 கிலோவும் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 50 கிலோ வந்தது. 29-வது ஏலத்தை விட 95 ஆயிரத்து 436 கிலோ அதிகரித்திருந்தது. அதில், இலை ரகம் 100 சதவீதம் விற்பனையானது. டஸ்ட் ரகம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 563 கிலோ விற்பனையானது. மேலும், இலை ரகத்தில் மொத்தமுள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை தூள்களும் 100 சதவீதம் விற்பனையாகின.



இலை ரகத்தில் குந்தா, சாலீஸ்பெரி, பந்தலூர் தொழிற்சாலைகளின் வரத்து அதிகமாக இருந்தது. டஸ்ட் ரகத்தில் சாலீஸ்பெரி தொழிற்சாலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 42 ஆயிரத்து 844 கிலோ வரத்து அதிகரித்து, இந்த தொழிற்சாலையின் மொத்த வருமானம் 32 லட்சத்து 53 ஆயிரத்து 881 ரூபாய் இருந்தது. ஏலத்தில் மொத்தம் 3 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 307 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு 71 ரூபாயாக இருந்தது. விலையில் ஒரு ரூபாய் 60 பைசா உயர்ந்தது. இந்த ஏலத்தில் விற்பனையும் அதிகரித்து, விலையிலும் உயர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...