கோவையில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி : தலைமறைவாக இருந்த தாய், மகன் உட்பட 3 பேர் கைது

கோவை : வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டு காலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியாளர்களை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காகவே, மாநகர போலீசாரும், மாவட்ட போலீசாரும் தனித்தனிப் பிரிவுகளை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் உறுதிபடுத்தப்படும் மோசடியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, மோசடி மன்னர்கள் பலர் தங்களிடம் இருக்கும் பண பலத்தினால், வெவ்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தலைமறைவாகவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், 2017-ம் ஆண்டில் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரூ பகுதியைச் சேர்ந்தவர்கள் வானதி சுரேந்தர் (54) மற்றும் மகன் ராஜீவ் (34). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் தங்கராஜ் (50) உதவியுடன், வடவள்ளி அருகே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் ஏஜென்ஸியை நடத்தி வந்தனர். இந்த ஏஜென்சியின் கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு பலர் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தினர். ஆனால், செலுத்திய பணத்திற்கான வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திருப்பித் தரப்படவில்லை. 

இதனால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் பினுமோல் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் அடுக்கடுக்காக புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து நேற்று தனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து சுரேந்தர் மற்றும் ராஜீவையும், சேலத்தில் வைத்து தங்கராஜையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இவர்கள் சுமார் ரூ. 35 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...