திருப்பூர் : திருப்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையிலுள்ள ஹவுசிங் யூனிட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மணி. இவர் இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டு மொட்டை மாடியில் துணிகளை காய வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் மணியை பின்தொடர்ந்து மொட்டை மாடிக்கு சென்று அவர் அணிந்துள்ள தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அதனை அவர் தடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர் மணியின் காதிலிருந்த கம்மல் மற்றும் மாட்டலையும் எடுக்க முயன்று அவரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்டு மாடிக்கு வந்த மணியின் கணவர் பாலசுப்ரமணியத்தையும் தாக்கிவிட்டு, அந்த மர்ம நபர் மாடியிலிருந்து குதித்துள்ளார்.

இதனால், ஏற்பட்ட காயத்தால் அந்த நபரால் ஓட முடியவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபரை சுற்றி வளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், மர்மநபரை ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மர்மநபர் தாக்கியதில், உதடு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்ட மணி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையிலுள்ள ஹவுசிங் யூனிட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மணி. இவர் இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டு மொட்டை மாடியில் துணிகளை காய வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் மணியை பின்தொடர்ந்து மொட்டை மாடிக்கு சென்று அவர் அணிந்துள்ள தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அதனை அவர் தடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர் மணியின் காதிலிருந்த கம்மல் மற்றும் மாட்டலையும் எடுக்க முயன்று அவரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்டு மாடிக்கு வந்த மணியின் கணவர் பாலசுப்ரமணியத்தையும் தாக்கிவிட்டு, அந்த மர்ம நபர் மாடியிலிருந்து குதித்துள்ளார்.

இதனால், ஏற்பட்ட காயத்தால் அந்த நபரால் ஓட முடியவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபரை சுற்றி வளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், மர்மநபரை ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மர்மநபர் தாக்கியதில், உதடு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்ட மணி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.