கோவை மாநகரில் தொடரும் சந்தன மரக்கடத்தல் : போலீசாருக்கு சவால் விடும் கடத்தல் கும்பல்

கோவை : சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட பாரதி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட பாரதி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2-வது வீதியைச் சேர்ந்த பிரேம்குமார் எல்.ஐ.சி. ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் சந்தன மரம் ஒன்றை வளர்த்து வந்தார். சுமார் 30 அடி உயரத்திற்கு வளர்ந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதை இன்று காலை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பிரேம்குமார் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை மாநகரில் அதிகரித்து வரும் சந்தன மரக்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இருவரை போலீசார் நேற்று கைது செய்து இருந்த நிலையில், மீண்டும் காவல்துறையினருக்கு சவால் விடும் விதமாக அதே பகுதியில் சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...