திருப்பூர் : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 42 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 42 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 5 மாதங்களாக நிதி திரட்டி வந்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க திரட்டப்பட்ட 42 லட்சம் ரூபாயை இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளையின் சேர்மன் சுப்ரமணியம் வழங்கினார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 5 மாதங்களாக நிதி திரட்டி வந்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க திரட்டப்பட்ட 42 லட்சம் ரூபாயை இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளையின் சேர்மன் சுப்ரமணியம் வழங்கினார்.