கோவை : ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
கோவை : ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயில் ஒன்று பொதுமக்களைக் கண்டு பயந்து போன நிலையில், ஒரு வாகனத்திற்கு கீழே பதுங்கி இருந்தது. இதனைக் கண்ட சிலர், அங்கு கூடியதால் கூட்டத்தைக் கண்ட மயில் மேலும் அச்சமடைந்தது. இதைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர் மெர்லின், உடனடியாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து வந்த அதிவிரைவு படையினர் மயிலை மீட்டு, மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுபோன்ற விலங்குகள் தொடர்பான அவசர சேவைகளுக்கு 180042545456 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயில் ஒன்று பொதுமக்களைக் கண்டு பயந்து போன நிலையில், ஒரு வாகனத்திற்கு கீழே பதுங்கி இருந்தது. இதனைக் கண்ட சிலர், அங்கு கூடியதால் கூட்டத்தைக் கண்ட மயில் மேலும் அச்சமடைந்தது. இதைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர் மெர்லின், உடனடியாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து வந்த அதிவிரைவு படையினர் மயிலை மீட்டு, மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுபோன்ற விலங்குகள் தொடர்பான அவசர சேவைகளுக்கு 180042545456 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.