நீலகிரி : நீலகிரி மாவட்டம் சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 4 வயது குட்டி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 4 வயது குட்டி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலமான சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வேட்டை தடுப்பு ஊழியர்கள் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேட்டை தடுப்பு ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் உடலுக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலமான சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வேட்டை தடுப்பு ஊழியர்கள் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேட்டை தடுப்பு ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் உடலுக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.