தவறான கருத்துக்களே தாய்பால் தானத்திற்கு தடையாக இருக்கிறது : உயிர்துளி அமைப்பு தகவல்

கோவை : தாய்பால் தானம் குறித்து தவறான கருத்துகள் நிலவுவதே அது கிடைக்க தடையாக உள்ளதாக உயிர் துளி அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை : தாய்பால் தானம் குறித்து தவறான கருத்துகள் நிலவுவதே அது கிடைக்க தடையாக உள்ளதாக உயிர் துளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்பால் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் பால் வாரம் தொடர்பாக கோவை பேரண்டிங் நெட்வொர்க் தனியார் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர்கள் மினு மற்றும் குமுதா ஆகியோர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- தாய்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதியில் சரவணம்பட்டியில் உள்ள பிரோசோன் மாலில் ஜயண்ட் வீல் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணம் பொது சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். 

மேலும், தாய்பால் குறித்த அச்சமில்லை என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றம் 7 நாட்களுக்கு செய்யப்படும். இது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாய்பால் தானம் அதிகரித்து உள்ளது. அவ்வாறு பெறப்படும் தாய் பால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும். மேலும், ஜயண்ட் கண்காட்சியின் போது குழந்தைகளை அரவணைத்தபடியே தாய்மார்கள் நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. 

தாய் பால் தானம் குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலான கல்லூரிகள் சம்மதம் தெரிவித்து உள்ளன, எனத் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...