நீலகிரி : உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சர் ஆக பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சர் ஆக பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷனி (24) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது பிரேதத்தை இன்று காலை உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மீட்ட காவல்துறையினர், உடலை உதகை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பி1 காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திரா பிரியதர்ஷினி கோவை பேரூரைச் சேர்ந்தவர். இவர் உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் கடந்த சில மாதங்களாக தங்கி நீதிமன்றத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷனி (24) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது பிரேதத்தை இன்று காலை உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மீட்ட காவல்துறையினர், உடலை உதகை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பி1 காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திரா பிரியதர்ஷினி கோவை பேரூரைச் சேர்ந்தவர். இவர் உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் கடந்த சில மாதங்களாக தங்கி நீதிமன்றத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.