கோவை : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
கோவை : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மோடி அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை என்பதே மோசடி. மாநிலங்கள்தான் கல்வி கொள்கையினை வகுக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசு மாநில உரிமைகளில் கை வைக்கிறது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர் பாசறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகிறோம். மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பிரச்சாரமாக கொண்டு செல்கின்றோம்.
புதிய கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த புதிய கல்வி கொள்கை அறிக்கையை பிராந்திய மொழிகளில் கொடுப்படவில்லை. 400-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த புதிய கல்வி அறிக்கையைப் படிக்கக் கூட போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற இருக்கிறோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது, எனத் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மாநில இளைஞர் பாசறை விஜயராகவன், கோவை மண்டல செயலாளர் வஹாப், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் கிஷோர், பேரறிவாளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மோடி அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை என்பதே மோசடி. மாநிலங்கள்தான் கல்வி கொள்கையினை வகுக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசு மாநில உரிமைகளில் கை வைக்கிறது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர் பாசறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகிறோம். மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பிரச்சாரமாக கொண்டு செல்கின்றோம்.
புதிய கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த புதிய கல்வி கொள்கை அறிக்கையை பிராந்திய மொழிகளில் கொடுப்படவில்லை. 400-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த புதிய கல்வி அறிக்கையைப் படிக்கக் கூட போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற இருக்கிறோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது, எனத் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மாநில இளைஞர் பாசறை விஜயராகவன், கோவை மண்டல செயலாளர் வஹாப், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் கிஷோர், பேரறிவாளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.