திருப்பூர் : பல ஆண்டுகளாக கை, கால்கள் செயல் இழந்து தவிக்கும் தனது மாற்றுத்திறனாளி மகனின் பராமரிப்பு செலவுக்கு உதவி செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் : பல ஆண்டுகளாக கை, கால்கள் செயல் இழந்து தவிக்கும் தனது மாற்றுத்திறனாளி மகனின் பராமரிப்பு செலவுக்கு உதவி செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து. இவரது மகன் சஞ்சய் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே திடீரென்று ஏற்பட்ட மஸ்குலர் டிசீஸ் காரணமாக கை, கால்கள் செயல் இழப்பிற்கு ஆளாகினார். இதனிடையே, மகனது பள்ளி படிப்பை அதோடு நிறுத்திவிட்ட நிலையில், மகனை வீட்டிலேயே வைத்து காளிமுத்து கடந்த 4 ஆண்டுகளாக கவனித்து வந்துள்ளார். இதனிடையே, மாற்றுத்திறனாளிக்கான நிதி உதவியை தனது மகனுக்கு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காளிமுத்து குற்றம்சாட்டுகின்றார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தனது மகனை தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், தனது மகனுக்கு பராமரிப்பு செலவு வழங்கக் கோரி மனு அளித்தார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து. இவரது மகன் சஞ்சய் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே திடீரென்று ஏற்பட்ட மஸ்குலர் டிசீஸ் காரணமாக கை, கால்கள் செயல் இழப்பிற்கு ஆளாகினார். இதனிடையே, மகனது பள்ளி படிப்பை அதோடு நிறுத்திவிட்ட நிலையில், மகனை வீட்டிலேயே வைத்து காளிமுத்து கடந்த 4 ஆண்டுகளாக கவனித்து வந்துள்ளார். இதனிடையே, மாற்றுத்திறனாளிக்கான நிதி உதவியை தனது மகனுக்கு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காளிமுத்து குற்றம்சாட்டுகின்றார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தனது மகனை தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், தனது மகனுக்கு பராமரிப்பு செலவு வழங்கக் கோரி மனு அளித்தார்.