குன்னூர் ராணுவ கல்லூரி அருகே சிறுத்தைகள் நடமாட்டம் : சி.சி.டி.வி. காட்சிகளால் பரபரப்பு

நீலகிரி : குன்னூர் ராணுவ கல்லூரி அருகே 2 சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : குன்னூர் ராணுவ கல்லூரி அருகே 2 சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ முகாமில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில், ராணுவ முகாமில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வரும் கல்லூரி அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை பரிசோதனை செய்த போது, அதில் கல்லூரி அருகேயுள்ள சாலையில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக இரவில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. 



இதனை ஆய்வு செய்த ராணுவ கல்லூரி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. அதன் பேரில், ராணுவ கல்லூரி வளாகத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...