திருப்பூர் : எந்தவொரு சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பொதுமக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : எந்தவொரு சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பொதுமக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் துக்ளக் பத்திரிக்கையின் வாசகர் குழு சார்பில் துக்ளக் தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றனர். ஆனால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார். எந்தவொரு வரலாற்றுச் சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எஸ்ரா.சற்குணம், மோகன். சி.லாசரஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கைப்பாவையாக பா. ரஞ்சித் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைக்கிராம, ஏழை, எளிய மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள்தான். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு தற்போதுள்ள பெரும்பான்மையே போதும், என தெரிவித்தார்.
திருப்பூரில் துக்ளக் பத்திரிக்கையின் வாசகர் குழு சார்பில் துக்ளக் தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றனர். ஆனால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார். எந்தவொரு வரலாற்றுச் சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எஸ்ரா.சற்குணம், மோகன். சி.லாசரஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கைப்பாவையாக பா. ரஞ்சித் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைக்கிராம, ஏழை, எளிய மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள்தான். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு தற்போதுள்ள பெரும்பான்மையே போதும், என தெரிவித்தார்.