மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தி திணிப்பதை ஏற்க முடியாது : தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம்

திருப்பூர் : திருப்பூரில் தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டில், 3 வயது குழந்தையை பள்ளி கல்விக்குள் கொண்டு வந்து மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதை ஏற்க முடியாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

திருப்பூர் : திருப்பூரில் தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டில், 3 வயது குழந்தையை பள்ளி கல்விக்குள் கொண்டு வந்து மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதை ஏற்க முடியாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



திருப்பூரில் தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை எதிர்ப்பு மாநாடு திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கே,ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில், கல்வியாளர் பிரின்ஸ், கஜேந்திரபாபு, வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 3-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு என்பதனையும், மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, 5 முதல் 10 மைல் தூரத்திற்குள் உள்ள பள்ளிகளை இணைப்பதும், ஆசியர்களோடு சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை பாடம் கற்பிக்க அனுமதிப்பது ஆசிரியர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, அரசியல் தலையீட்டை அதிகரிக்கவும் செய்வதால் அதனை எதிர்ப்பதாகவும், 200 அந்நிய நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதித்து கல்வியை கார்ப்பரேட்மயமாக்க முயலும் கொள்கையை எதிர்க்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்த மாநாட்டில் மாணவர் சங்கங்கள், திராவிடர் கழக இயக்கங்கள், கல்வியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...