கோவை : மலை மாவட்டமான நீலகிரியில் தொண்டை அடைப்பான் டிப்தீரியா நோயை எதிர்கொள்ள 80 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயாராகவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்தார்.
கோவை : மலை மாவட்டமான நீலகிரியில் தொண்டை அடைப்பான் டிப்தீரியா நோயை எதிர்கொள்ள 80 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயாராகவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்தார்.
மலை கிராமங்களில் மட்டுமே அதிகம் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதுவரை இந்த நோய் நீலகிரியில் யாரையும் தாக்கவில்லை. இந்த நோய் குறிப்பாக, 7 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கே அதிகம் வரக்கூடியது. முதலில் காய்ச்சல் தொண்டை வலியால் அவதிப்படுவர். இவர்களை கண்டறிய சிறப்பு சிகிச்சை முகாமினை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"சில தனியார் பள்ளிகள் தாங்களாகவே தனியாரிடம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதாக கூறினாலும், தடுப்பு எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களை மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நோய்க்கான தடுப்பூசி மலைக் கிராமங்களில் மாணவர்கள் போடுவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தடுப்பூசி போடாத காரணத்தால் பிற மாணவர்களுக்கும் எளிதாகப் பரவுகிறது. மேலும், வேகமாகப் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோய் நீலகிரிக்குள் வந்து விடாமல் இருக்க மாவட்ட எல்லைகளான கூடலூர், பர்லியார், குஞ்சப்பண்னை போன்ற நுழைவு வாயில்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்," மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி என்றார்.
மலை கிராமங்களில் மட்டுமே அதிகம் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதுவரை இந்த நோய் நீலகிரியில் யாரையும் தாக்கவில்லை. இந்த நோய் குறிப்பாக, 7 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கே அதிகம் வரக்கூடியது. முதலில் காய்ச்சல் தொண்டை வலியால் அவதிப்படுவர். இவர்களை கண்டறிய சிறப்பு சிகிச்சை முகாமினை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"சில தனியார் பள்ளிகள் தாங்களாகவே தனியாரிடம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதாக கூறினாலும், தடுப்பு எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களை மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நோய்க்கான தடுப்பூசி மலைக் கிராமங்களில் மாணவர்கள் போடுவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தடுப்பூசி போடாத காரணத்தால் பிற மாணவர்களுக்கும் எளிதாகப் பரவுகிறது. மேலும், வேகமாகப் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோய் நீலகிரிக்குள் வந்து விடாமல் இருக்க மாவட்ட எல்லைகளான கூடலூர், பர்லியார், குஞ்சப்பண்னை போன்ற நுழைவு வாயில்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்," மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி என்றார்.