கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நவஇந்தியா அருகே சாலையோரம் இருந்த முட்புதர்களில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நவஇந்தியா அருகே சாலையோரம் இருந்த முட்புதர்களில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களில் திடீர் திடீரென தீப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு உடையாம்பாளையம் அருகே உள்ள முட்புதரில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயானது அருகே உள்ள பள்ளி வரை சென்றது. பின்னர், தீயணைப்பு துறையினரின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவினாசி சாலை நவஇந்தியா பகுதியில் ஆர்.ஆர். லேண்ட்மார்க் என்ற நிறுவனத்திற்கு அருகில் காய்ந்த கருவேல முட்புதர்களில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அருகில் இருந்த பணியாளர்கள் நீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், காய்ந்த சருகுகள் புல்வெளியில் இருந்ததால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்தப் பகுதியில் தீ பிடித்தது தொடர்பாக போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களில் திடீர் திடீரென தீப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு உடையாம்பாளையம் அருகே உள்ள முட்புதரில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயானது அருகே உள்ள பள்ளி வரை சென்றது. பின்னர், தீயணைப்பு துறையினரின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவினாசி சாலை நவஇந்தியா பகுதியில் ஆர்.ஆர். லேண்ட்மார்க் என்ற நிறுவனத்திற்கு அருகில் காய்ந்த கருவேல முட்புதர்களில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அருகில் இருந்த பணியாளர்கள் நீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், காய்ந்த சருகுகள் புல்வெளியில் இருந்ததால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்தப் பகுதியில் தீ பிடித்தது தொடர்பாக போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.