மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு : போஸ்டர்களை இந்து அமைப்பினர் கிழித்ததால் பரபரப்பு

கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவை ஒட்டி நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர், போஸ்டர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவை ஒட்டி நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர், போஸ்டர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நாளை காலை விகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, இன்று இரவு முதலே பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையில் நிற்பது வழக்கம். அத்துடன் விழாவைக் காண ஏராளமான கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால், பக்தர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இசை மற்றும் நாட்டுப்புற பாட்டுக் கச்சேரி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாட்டில் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல நாட்டுப்புற பாடகர் ஜோடியான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி பாட உள்ளது.

இந்த நிலையில், இந்த ஜோடி கோவிலில் பாடுவதாக மேட்டுப்பாளையம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஜோடி இந்து அமைப்புகளையும், பிரதமரையும் விமர்சித்து பாடல்கள் பாடியதாக குற்றம்சாட்டியுள்ள இந்து அமைப்புகள், இந்த ஜோடி கோவிலில் பாடுவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.



மேலும், சுவர்களில் ஒட்டியுள்ள விளம்பர போஸ்டர்களையும் கிழித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்து அமைப்புகளுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், கம்யூனிச சித்தாத்தங்களை கொண்டுள்ள இந்த ஜோடி கோவிலில் பாடக் கூடாது எனவும், அதையும் மீறி பாடினால் மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஆடி குண்டம் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...