கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சந்தன மரக்கடத்தல் மற்றும் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களில் இருவரைக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சந்தன மரக்கடத்தல் மற்றும் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களில் இருவரைக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள முருகன் பஞ்சாலை குடியிருப்பு வளாகத்தில் 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இருவர் ரம்பம், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கடத்தியுள்ளனர். பின்னர், தடாகம் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறை கட்டுப்பாட்டைத் தாண்டி அதிவேகமாக காரை ஓட்டி சென்று வடவள்ளி அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து, வந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது, சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்டப் பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல, ராம் நகர் அருகேயும் சந்தன மரங்கள் வெட்ட முயன்ற மர்மநபர்கள் காவலரின் சத்தத்தைக் கேட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை பகுதியிலும் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாளின் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சோமசேகரின் தலைமையில் ஆய்வாளர்கள் சுஜாதா மற்றும் முத்துமணி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வாழப்பாடி புழுதிக் குட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வல்லரசு ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சந்தன மர கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்படும் மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் சந்தன மரக்கடத்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூழலில், போலீசாரின் முயற்சியால் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள முருகன் பஞ்சாலை குடியிருப்பு வளாகத்தில் 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இருவர் ரம்பம், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கடத்தியுள்ளனர். பின்னர், தடாகம் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறை கட்டுப்பாட்டைத் தாண்டி அதிவேகமாக காரை ஓட்டி சென்று வடவள்ளி அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து, வந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது, சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்டப் பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல, ராம் நகர் அருகேயும் சந்தன மரங்கள் வெட்ட முயன்ற மர்மநபர்கள் காவலரின் சத்தத்தைக் கேட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை பகுதியிலும் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாளின் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சோமசேகரின் தலைமையில் ஆய்வாளர்கள் சுஜாதா மற்றும் முத்துமணி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வாழப்பாடி புழுதிக் குட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வல்லரசு ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சந்தன மர கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்படும் மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் சந்தன மரக்கடத்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூழலில், போலீசாரின் முயற்சியால் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.