ஒபாமாவுக்கு அடுத்ததாக மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி : ஆக., 12-ம் தேதி ஒளிபரப்பாகிறது பியர் கிரில்ஸ் உடன் பிரதமரின் ஒரு சாகசப் பயணம்

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 



இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக முதல் சில மணிநேரங்கள் பிரதமர் மோடியிடம் இருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. பின்னர் ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விளம்பர படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் பலியானது பிரதமர் மோடி ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். இத்தனை பயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்திருக்கிறார் என்பதை அவரது சிரிப்பே வெளிப்படுத்துகிறது, இவ்வாறு அவர் சாடியுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...