கோவை : மேட்டுப்பாளையம் பகுதி காரமடை பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியை புதிய இடத்தில் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மனு அளித்தனர்.
கோவை : மேட்டுப்பாளையம் பகுதி காரமடை பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியை புதிய இடத்தில் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் இடத்தில் அங்கன்வாடி செயல்பட துவங்கியது. அப்போது, இந்த அங்கன்வாடியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில், செங்குத்தாக உள்ள பாதை வழியாக குழந்தைகள் வந்து செல்கின்றனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தாலும், சுகாதாரமற்ற நிலை தற்போது அங்கு நிலவி வருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்பகுதியில், அதிக அளவில் குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். தற்போது, 20 குழந்தைகள் வரை உள்ள நிலையில், இதனை அதே பகுதியில் மாற்று இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், என தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் இடத்தில் அங்கன்வாடி செயல்பட துவங்கியது. அப்போது, இந்த அங்கன்வாடியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில், செங்குத்தாக உள்ள பாதை வழியாக குழந்தைகள் வந்து செல்கின்றனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தாலும், சுகாதாரமற்ற நிலை தற்போது அங்கு நிலவி வருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்பகுதியில், அதிக அளவில் குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். தற்போது, 20 குழந்தைகள் வரை உள்ள நிலையில், இதனை அதே பகுதியில் மாற்று இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், என தெரிவித்தனர்.