சர்வதேச புலிகள் தினத்தையொட்டி புலி வேடமணிந்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை : சர்வதேச புலிகள் தினத்தையொட்டி கோவை வனத்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


கோவை : சர்வதேச புலிகள் தினத்தையொட்டி கோவை வனத்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.



இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ரத்தினம் கலை மற்றும் அறிவியல், எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில், தங்களது முகங்களில் புலி போன்று வண்ணங்களால் பூசிக்கொண்டும், புலிகள் போன்று உடையணிந்து கலந்து கொண்டு, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



கோவை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று மீண்டும் மாவட்ட வனத்துறை அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, மாணவ மாணவியர் புலிகள் பற்றிய விழிப்புணர்வு அடங்கிய வசனங்களை கோஷமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...