கோவை : பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, முக்கிய பகுதிகளில் காவலர்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை : பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, முக்கிய பகுதிகளில் காவலர்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை கிழக்கு மாநகர கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- மாநகரின் பிரதான சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுபாளையம், பொள்ளாச்சி, சத்தி சாலைகளில் சிக்னலுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களை மாற்றி அமைக்க வேண்டும், மக்கள் அதிகம் நடமாடும் சுங்கம், சுந்தராபுரம், ஈச்சனாரி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் இது குறித்து அக்கட்சியின் கிழக்கு மாநகர செயலாளர் தனபால் கூறுகையில், "தற்போது கணபதி முதல் சரவணம்பட்டி வரை அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இந்த பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம், சர்வீஸ் சாலைகள், பார்க்கிங்கை முறைபடுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பீளமேடு, சித்ரா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை அதிகம் நியமிக்க வேண்டும். பொதுமக்கள் இன்னலின்றி பயணிக்க நடை மேம்பாலங்கள் உடனடியாக அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம்," என தெரிவித்தார்.

கோவை கிழக்கு மாநகர கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- மாநகரின் பிரதான சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுபாளையம், பொள்ளாச்சி, சத்தி சாலைகளில் சிக்னலுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களை மாற்றி அமைக்க வேண்டும், மக்கள் அதிகம் நடமாடும் சுங்கம், சுந்தராபுரம், ஈச்சனாரி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் இது குறித்து அக்கட்சியின் கிழக்கு மாநகர செயலாளர் தனபால் கூறுகையில், "தற்போது கணபதி முதல் சரவணம்பட்டி வரை அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இந்த பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம், சர்வீஸ் சாலைகள், பார்க்கிங்கை முறைபடுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பீளமேடு, சித்ரா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை அதிகம் நியமிக்க வேண்டும். பொதுமக்கள் இன்னலின்றி பயணிக்க நடை மேம்பாலங்கள் உடனடியாக அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம்," என தெரிவித்தார்.