கோவை : கொடிசியாவில் 10 நாட்கள் நடைபெற்ற கோவை புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் வெளியிடப்பட்டது.
கோவை : கொடிசியாவில் 10 நாட்கள் நடைபெற்ற கோவை புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் வெளியிடப்பட்டது.

கொடிசியா நடத்தும் கோவை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி நாவலின் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாசகர்கள் நாவல் குறித்த தங்களது கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிகர் பறையிசை குழுவினருடைய பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 25 கலைஞர்கள் பறை இசைக் கருவியை இசைத்தபடி ஒயிலாக நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. பின்னர், 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் அரங்கில் வெளியிடப்பட்டது.

இறுதியாக நடைபெற்ற நிறைவு விழாவில் பபாசி தலைவர் வைரவன், இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் பாலசுந்தரம், கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ், புத்தகத் திருவிழா குழுவின் ஆலோசகர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பான ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த பைரவன் இந்த முறை புத்தகங்கள் உடைய விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தார். நிகழ்வில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஆர்வமுடன் இந்தப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பதிப்பகங்களையும், புத்தக விற்பனையாளர்களையும், வாசகர்களையும், எழுத்தாளர்களையும், புத்தக திருவிழாவிற்கு உதவி செய்த ஸ்பான்சர்களையும், இன்னபிற அமைப்பினரையும் புத்தக திருவிழாவில் தலைவர் நன்றி பாராட்டினார்.

கொடிசியா நடத்தும் கோவை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி நாவலின் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாசகர்கள் நாவல் குறித்த தங்களது கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிகர் பறையிசை குழுவினருடைய பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 25 கலைஞர்கள் பறை இசைக் கருவியை இசைத்தபடி ஒயிலாக நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. பின்னர், 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் அரங்கில் வெளியிடப்பட்டது.

இறுதியாக நடைபெற்ற நிறைவு விழாவில் பபாசி தலைவர் வைரவன், இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் பாலசுந்தரம், கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ், புத்தகத் திருவிழா குழுவின் ஆலோசகர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பான ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த பைரவன் இந்த முறை புத்தகங்கள் உடைய விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தார். நிகழ்வில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஆர்வமுடன் இந்தப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பதிப்பகங்களையும், புத்தக விற்பனையாளர்களையும், வாசகர்களையும், எழுத்தாளர்களையும், புத்தக திருவிழாவிற்கு உதவி செய்த ஸ்பான்சர்களையும், இன்னபிற அமைப்பினரையும் புத்தக திருவிழாவில் தலைவர் நன்றி பாராட்டினார்.