புலிகள் பாதுகாப்பு குறித்து 24 நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகனம் கோவையில் இருந்து புறப்பட்டது

கோவை : சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சி.எம்.எஸ். கல்லூரி சார்பில் 24 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் இன்று கோவையில் தனது பயணத்தை தொடங்கியது.

கோவை : சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சி.எம்.எஸ். கல்லூரி சார்பில் 24 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் இன்று கோவையில் தனது பயணத்தை தொடங்கியது.



சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்க சர்வதேச அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சி.எம்.எஸ். கல்லூரி மற்றும் உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, டபுள்யூ.டி.எஃப். மற்றும் உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையான 4,000 என்பதை வலியுறுத்தும் விதமாக WTF 4000 என்ற வரைபடம் போன்று மாணவ, மாணவிகள் புலிகளின் முகமூடி அணிந்து அணிவகுத்து நின்றனர்.



இதைத்தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த கௌதம் மேனன் மற்றும் பால் ஆகியோர் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி கார் மூலம் தங்கள் பயணத்தை துவக்கினர். சி.எம்.எஸ். கல்லூரி மைதானத்தில் அதற்கான பயணத்தை, கார் மூலம் உலகை சுற்றி வந்த கோவையைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது கோவையில் துவங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சீனா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஹங்கேரி, ஜெர்மன், இத்தாலி என சுமார் 24 நாடுகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பிரான்சில் முடிவடைகிறது. 



65 நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வதாக உலக புலிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இதேபோல, புலிகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என இதில் பங்கேற்ற மாணவ, மாணவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...