கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச்‌ சேவை மேலும்‌ அதிகரிக்கப்படும் : எம்.பி. ஆ.ராசாவின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்

டெல்லி : கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச்‌ சேவை மேலும்‌ அதிகரிக்கப்படும்‌ என எம்.பி. ஆ. ராசாவின் கோரிக்கைக்கு மத்திய விமானப்‌ போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ பதிலளித்தார்.

டெல்லி : கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச்‌ சேவை மேலும்‌ அதிகரிக்கப்படும்‌ என எம்.பி. ஆ. ராசாவின் கோரிக்கைக்கு மத்திய விமானப்‌ போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ பதிலளித்தார்.

கோவையிலிருந்து துபாய்‌, கோலாலம்பூர்‌ மற்றும்‌ பாங்காக்‌ போன்ற நகரங்களுக்கு விமானப்‌ போக்குவரத்து வசதி செய்யக்கோரி கடந்த மாதம்‌ மக்களவையில்‌ கேள்வி நேரத்தின்போது எம்.பி. ஆ. ராசா, மத்திய விமானப்‌ போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ ஹர்தீப்சிங்‌ பூரியிடம்‌ வலியுறுத்தி பேசினார்‌. அப்போது, தொழில்‌ நகரமான கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச்‌ சேவை மிகவும்‌ குறைவாகவே இயக்கப்படுவது குறித்தும்‌, விமானச்‌ சேவைகளை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும்‌ அது குறித்து விமானப்‌ போக்குவரத்துத்துறை எவ்வித நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை எனவும்‌ கேள்வியெழுப்பப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து, மத்திய விமானப்‌ போக்குவரத்துத்துறை அமைச்சரை கடந்த மாதம் 28-ம் தேதி ஆ.ராசா நேரில்‌ சந்தித்து இது குறித்து கோரிக்கை மனுவும்‌ அளித்தார்‌. 

இதற்கு மத்திய விமானப்‌ போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ ஹர்தீப்சிங்‌ பூரி, கடந்த 22-ம் தேதி ஆ. ராசாவுக்கு இது குறித்து பதில்‌ அனுப்பியுள்ளார்‌ அதில்‌, தற்போது கோவையிலிருந்து சிங்கப்பூர்‌, சார்ஜா மற்றும்‌ இலங்கைக்கு விமானச்‌ சேவைகளை முறையே ஏர்‌ இந்தியா, சில்க்‌ ஏர்‌ மற்றும்‌ ஸ்ரீலங்கன்‌ ஏர்லைன்ஸ்‌ நிறுவனங்கள்‌ இயக்கி வருவதாகவும்,‌ வெளிநாட்டு விமான நிறுவனங்கள்‌ தற்போது உள்ள நடைமுறையில்‌ உடனடியாக விமானச்‌ சேவைகளை கோவையில்‌ தொடங்க இயலாது எனவும்‌, இருப்பினும்‌ இந்திய விமான நிறுவனங்கள்‌ கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச்‌ சேவைகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்‌ விமானப்‌ போக்குவரத்துத்துறை செயலாளர்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்‌ தெரிவித்துள்ளார்‌. மேற்கண்ட நடவடிக்கை மூலம்‌ இந்திய விமான நிறுவனங்கள்‌ கோவையிருந்து வெளிநாடுகளுக்கு விரைவில்‌ தங்களது விமானச்‌ சேவைகளை தொடங்கிட வழிவகை செய்யப்படும்‌ எனவும்‌ உறுதியளித்தார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...