கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தேக்கம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மூங்கில் மரத்தில் சிம்மவாகணம் பொறித்த கொடி எடுத்து வரப்பட்டு பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயர் ஆலயத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இதனை தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள் அம்மனுக்கு பூமாலை, பழம், பட்டாடை ஆகிய சீர் வரிசையுடன் திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், கோவிலை சுற்றி வலம் வந்து கொடி மரம் முன்பு வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் கொண்டு வேதமந்திரங்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோசங்கள் முழங்க சிம்மவாகன கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிபிடத்தக்கது.

தேக்கம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மூங்கில் மரத்தில் சிம்மவாகணம் பொறித்த கொடி எடுத்து வரப்பட்டு பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயர் ஆலயத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இதனை தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள் அம்மனுக்கு பூமாலை, பழம், பட்டாடை ஆகிய சீர் வரிசையுடன் திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், கோவிலை சுற்றி வலம் வந்து கொடி மரம் முன்பு வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் கொண்டு வேதமந்திரங்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோசங்கள் முழங்க சிம்மவாகன கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிபிடத்தக்கது.