'உயர்மின் கோபுரங்களுக்கு பதில் கேபிள்களாக மாற்று' : டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எம்.பி., பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

டெல்லி : உயர் மின்னழுத்த கோபுரம் நிறுவும் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் ஆதரவு அளித்தார்.

டெல்லி : உயர் மின்னழுத்த கோபுரம் நிறுவும் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் ஆதரவு அளித்தார். 

உயர் மின்னழுத்த கோபுரம் நிறுவும் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஆல் இந்தியா கிசன் சபாவுடன் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் இரு தினங்களாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆதரவு அளிக்கும் வகையில் கோவை மக்களவை எம்.பி., பி.ஆர். நடராஜன் கலந்து கொண்டார். அங்கு விவசாயிகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது :- விவசாய நிலங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு இருநிலைப்பாடாக செயல்பட்டு வருகிறது. டெல்லிக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாற்று வழியில் உயர் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறினார். ஆனால், சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், விளைநிலங்கள் வழியாக அமைப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்கிறார். இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் பேசி முடித்த கமிஷனே ஆகும், எனக் கூறினார்.

மேலும், ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள பழைய உயர்மின் கோபுரங்களுக்கு வழங்கப்படும் வாடகை தொகையை புதியதாக பொருத்தவிருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கான வாடகையாக வழங்க வேண்டும் என்றும், அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வயர்களுக்கு பதிலாக கேபிள்களை பயன்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...