கோவை : கோவை எல்.என்.டி புறவழிசாலை வெள்ளலூர் பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை : கோவை எல்.என்.டி புறவழிசாலை வெள்ளலூர் பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலக்காடு மாவட்டம் வாழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (44). இவர் KL 52 B 1014 என்ற எண் கொண்ட காரில் தனது கட்டிட நிறுவனத்தில் கான்ட்ராக்ட் பணியில் இருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கன்னியாகுமரிக்கு மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கோவை எல்.என்.டி. புறவழிச்சாலை வெள்ளலூர் பிரிவு அருகே வரும் பொழுது, TN 38 CH 0213 என்ற எண் கொண்ட ஈச்சர் லாரி, முகமது பஷீர் ஓட்டி வந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த ஒரு பெண்ணும், ஆணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும், காருக்குள் இருந்த மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவர் பலியாகினர். மீதம் உள்ள ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் விபரம் :- முகமது பஷீர் (42), ஹிரலா சிகாரி (28), கவுரங்கா பண்டிட் (30), லலிதா மொண்டல் (31), மிதுன் பண்டிட் (27) என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாவுக்கு சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் வாழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (44). இவர் KL 52 B 1014 என்ற எண் கொண்ட காரில் தனது கட்டிட நிறுவனத்தில் கான்ட்ராக்ட் பணியில் இருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கன்னியாகுமரிக்கு மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கோவை எல்.என்.டி. புறவழிச்சாலை வெள்ளலூர் பிரிவு அருகே வரும் பொழுது, TN 38 CH 0213 என்ற எண் கொண்ட ஈச்சர் லாரி, முகமது பஷீர் ஓட்டி வந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த ஒரு பெண்ணும், ஆணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும், காருக்குள் இருந்த மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவர் பலியாகினர். மீதம் உள்ள ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் விபரம் :- முகமது பஷீர் (42), ஹிரலா சிகாரி (28), கவுரங்கா பண்டிட் (30), லலிதா மொண்டல் (31), மிதுன் பண்டிட் (27) என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாவுக்கு சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.