முகநூலில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட விவகாரம் : தி.வி.க. மாவட்ட செயலாளருக்கு ஆக.,9 வரை நீதிமன்றக் காவல்

கோவை : பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக முகநூலில் கருத்து பதிவு செய்த திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை : பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக முகநூலில் கருத்து பதிவு செய்த திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தனது முகநூலில் 'தில் இருந்தால் வா' என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் இன்று நிர்மல் குமாரை கைது செய்தனர். இதில், நிர்மல் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 



இதைத்தொடர்ந்து, கோவை பந்தய சாலையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் குற்றவியல் நீதிபதி பிரபு முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, நிர்மல் குமாரை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...